வானில் பற்றி எரிந்த விமானம்: சவுதி கால்பந்து வீரர்கள் மயிரிளையில் உயிர் பிழைப்பு!
Tuesday, June 19th, 2018ரஷ்யாவில் இடம்பெற்று வரும் ஃபிபா உலககிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரில் உருகுவேயுடன் இடம்பெறவுள்ள போட்டிக்காக மொஸ்கோ நகரிலிருந்து ரொஸ்தொவ் நகரிற்கு சவுதி அரேபிய அணி பயணித்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் இறக்கைகளிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சவுதி அரேபிய அணி வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமானம் பாதுகாப்பான முறையில் ரொஸ்தொவ் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சவுதி அரேபிய விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதோடு, தீப்பரவல் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் விவகாரம்: 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு!
ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது தேர்வாவது எப்படி?
மலேசியாவில் 10,000 இலங்கையருக்கு தொழில்வாய்ப்பு வழங்க அந்நாட்டு அமைச்சரவையில் தீர்மானம்!
|
|