வரலாற்று படைத்த பராக் ஒபாமா.!
Sunday, May 29th, 2016
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும்போதே போரின் நினைவுச் சின்னமான ஹிரோஷிமாவிற்கு விஜயம் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா வரலாற்றில் பதியப்பட்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின்போது, ஹிரோஷிமாவில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீசப்பட்ட அணுகுண்டினால் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் குறித்த அதே வருடத்தில் உயிரிழந்தனர்.
இதேவேளை, ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்ற பராக் ஒபாமா முதலாவது அணுகுண்டு வீசப்பட்ட பகுதியான ஹிரோஷிமாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு, அவருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி, இங்கிலாந்து உள்ளிட்ட ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை புமியோ கிஷிடா ஆகியோரும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Related posts:
முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை ஆணைக்கு டிரம்பின் சிரேஸ்ட அமைச்சர்கள் ஆதரவு!
ஓவர் டைம் வேலைக்கு முடிவுகட்ட ஐப்பானில் புதிய திட்டம்!
பாகிஸ்தானில் பாரிய குண்டுவெடிப்பு - 25 பேர் உடல் சிதறி பலி!
|
|
|


