யேமனில் சவுதி தலைமையிலான விமானப்படை தாக்குதலில் – பத்து பேர் உயிரிழப்பு!

Friday, February 17th, 2017

யேமன் தலைநகரின் வடக்கு பகுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சவுதி தலைமையிலான கூட்டணியின் விமான தாக்குதலில் ஒன்பது பெண்களும் ஒரு குழந்தையும் என பத்துபேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யேமன் தலைநகர் சனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அர்ஹாப் மாவட்டத்தில் பெண் ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வீடு ஒன்றின் மீதே இந்த விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

YEMEN

Related posts: