மூன்றாம் உலகப்போரை திட்டமிட்டது யார்?

Friday, April 28th, 2017

உலகம் பாரிய ஆபத்தில், அழிவின் விளிம்பில் இருக்கின்றது. அதற்கு காரணம் அடுத்த உலக யுத்தம் ஏற்படப் போகின்றது என்பதே.இந்த நிலையில் இந்த உலகயுத்தம் ஏற்கனவே திட்டமிட்டபடியே நடந்து வருகின்றது என்ற அதிர்ச்சி செய்திகளை மேற்குலக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இரண்டு உலக யுத்தங்களை சந்தித்த இந்த உலகு இப்போது மூன்றாவது உலக யுத்தத்திற்கு தாக்கு பிடிக்குமா? என்பது மிகப்பெரிய சந்தேகம். காரணம் அதி நவீன தொழில் நுட்பம்.சூடு பிடித்துள்ள போர் பதற்றம் மற்றும் பகிரங்க போர் ஒத்திகைகள் மூலம் உலகம் பயங்கர ஆபத்தை எதிர் நோக்கிக் கொண்டு இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன.

இந்த நிலையில் இந்த உலக யுத்தம் 2017 களில் ஆரம்பமாகும், இது ஆண்டுகள் பலவற்றிக்கு முன்பே வகுக்கப்பட்ட திட்டம். இது ஒரு திட்டமிடப்பட்ட சதி என்றே கூறப்படுகின்றது.

முழு உலகையும் ஆள காத்திருக்கும் ஓர் மர்ம கூட்டம் முலமாகவே இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என மேலைத்தேய ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்டுள்ளன.அதாவது இப்போதைய நடக்கும் யுத்தங்களும் கூட ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்ற ஆச்சரிய உண்மை தற்போது வெளிவந்துள்ளது.

1871ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆல்பர்ட் பைக் (Albert Pike) எனும் இராணுவ ஜெனரல் அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்று பற்றி பரவலாக பேசப்படுகின்றது. குறித்த கடிதத்தில் ஏற்கனவே 3 உலக யுத்தங்கள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதில் 3ஆவது உலக யுத்தம் பற்றி அவர் கூறியுள்ளதாவது.

“மூன்றாவது உலக யுத்தமானது கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான போர் மூலம் உருவாக்கப்படும். இஸ்லாமிய நாடுகள் மூலம் போர் ஆரம்பமாகும்”

“அதன் பின்னர் உலகம் ஓர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஏதுவாக அமையும்” என்ற வகையில் குறித்த கடிதம் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இப்போது நடக்கும் சம்பவங்கள் இதனை அப்படியே காட்டுகின்றது. மத்திய கிழக்கு நாடுகள் பற்றி எரியும் சாத்தியக் கூறுகள் ஏற்பட்டு உள்ளதை அவதானிக்க முடியுமானதாக இருக்கின்றது.

இதேவேளை இந்த தனிக்குடை உலக கோட்பாடு தொடர்பில் 1903ஆம் ஆண்டு protocols of the elders of zion எனும் நூல் வெளியிடப்பட்டது. எனினும் குறித்த நூல் தடை செய்யப்பட்டது. இந்த நூல் இந்த உலக யுத்தம் பற்றி தெளிவாக கூறிய காரணத்தினால், பல நாடுகளில் தடை செய்யப்பட்டதோடு, ஒரு சில நாடுகளில் இந்த புத்தகத்தை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனையும் கொடுக்கப்பட்டது.

அதன் காரணமாக இந்தப் புத்தகம் தொடர்பில் பெரிதாக பேசப்பட வில்லை. இது சாத்தியமா என்று சிந்திக்கத் தூண்டும் போது, மேலும் பல ஆதாரங்கள் வெளி வந்தன. அதாவது இந்த உலகப்போர் இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மூலம் ஆரம்பமாகும் என்பதும் ஏற்கனவே வகுக்கப்பட்ட திட்டம். அமெரிக்காவின் அதிபர் இவர் தான் என்பது ட்ரம்பின் பதவி ஏற்பிற்கு முன்பே நிச்சயிக்கப்பட்டு விட்டது.

இது தொடர்பில் பல ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் வெளியிட்டன. ஆக இப்போதைய திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டது.அதன் படி சரியாக இப்போது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டு உலகை அழித்திடுமா? சரியாக திட்டமிட்டு ஒட்டு மொத்த உலக மக்களும் அடிமைகளாக்கப்பட்டு அடிமைப்படுத்தப்படப் போகின்றார்களா? என்பது இப்போதைக்கு மிகப்பெரிய கேள்விக்குறி.

என்றாலும் ஏற்கனவே திட்டமிட்டு வெற்றிகரமாக இந்த உலக யுத்தங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. நடைபெறும் சம்பவங்களும் ஏற்கனவே கூறியதைப் போலவே நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: