முகரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாள்களுக்கு சமூக வலைத்தளங்களை முடக்கும் பாகிஸ்தான்!
Friday, July 5th, 2024
பாகிஸ்தானில் எதிர்வரும் 13 ஆம் திகதிமுதல் 18ஆம் திகதி வரை 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
முகரம் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்களுக்குப் பஞ்சாப் மாகாணத்தில் தடை விதிக்க வேண்டும் என அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif) பரிந்துரைத்துள்ளார்.
வெறுப்புப் பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகப் பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒபாமாவின் கொள்கையை கடைபிடிக்க போவதாக டிரம்ப் அறிவிப்பு!
வளி மாசடைவால் வருடாந்தம் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் - உலக சுகாதார ஸ்தாபனம்!
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து தமிழகத்தில் சந்திப்புகளை முன்னெடுத்த இலங்கைக்கான இந்திய உய...
|
|
|


