மீண்டும் விண்ணில் பாய்ந்தது ஏவுகணை!

Monday, May 1st, 2017

உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதற்கு ஒருபோதும் செவிசாய்க்க மாட்டோம் என வட கொரியா மீண்டும் நிரூபித்துள்ளது.

வடகொரியா மீண்டும் நேற்று காலை 5.30 மணிக்கு புக்சாங் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பேலிஸ்டிக்’ ரக ஏவுகணை ஒன்றை சோதித்துப் பார்த்தது.ஆனால் அந்த ஏவுகணை, விண்ணில் பாய்ந்த சில வினாடிகளில் வெடித்துச் சிதறிவிட்டது. அந்த வகையில், இந்த சோதனை தோல்வியில் முடிந்து விட்டது. இந்த ஏவுகணை ‘கேஎன்–17 பேலிஸ்டிக்’ ரகத்தை சேர்ந்தது என தகவல்கள் கூறுகின்றன.

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்திருப்பதை அதன் அண்டை நாடான தென்கொரியாவும், அமெரிக்காவும் உறுதி செய்தன.சீனா மற்றும் அதன் அதிபர் ஜின்பிங்கின் விருப்பத்தை வடகொரியா மதிக்கவில்லை. ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியபோதும், அது மோசமான தோல்வியை கண்டுள்ளது என டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Related posts: