மீண்டும் ஜனாதிபதியானார் ரிஷப் தாயின் ஏர்டோகன்!

Monday, June 25th, 2018

துருக்கியின் ஜனாதிபதியாக ரிஷப் தாயின் ஏர்டோகன் (Recep Tayyip Erdogan) இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்படவுள்ளார்.

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை 99 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதில் ஏர்டோகன் 53 சதவீதமான வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முஹாரம் இன்ஸ்சுக்கு (Muharrem Ince) 31 சதவீதமாக வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன.

இதுவரையில் வெளியான தகவலின் படி ஏர்டோகன் வெற்றிபெற்றதாகக் கருதப்பட்டாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: