மார்ச் 22 இல் இஸ்லுக்கான சேவையை ஆரம்பிக்கும் ஏர் இந்தியா விமான சேவை!

Friday, March 9th, 2018

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு விரைவில் நேரடி விமானச் சேவையை ஆரம்பிக்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் இந்த விமானம் டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகரை சென்றடைய சுமார் 8 மணி நேரம் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், சவுதி அரேபியா நாட்டின் வான் எல்லை வழியாக சென்றால் ஐந்தரை மணி நேரத்தில் டெல் அவிவ் போய் சேர்ந்து விடலாம். ஆனால், இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அல்லது சென்று திரும்பும் எந்த விமானமும் தங்கள் நாட்டு வான் எல்லையில் நுழைய கூடாது என சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையை பயன்படுத்திகொள்ள சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த விமான சேவையானது எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 8 மணி நேரத்துக்கு பதிலாக ஐந்தரை மணி நேரத்தில் டெல்லியில் இருந்து டெல் அவிவ் சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: