மனித கடத்தலை முறியடிக்க இலங்கைக்கு உலங்குவானூர்தி வழங்கும் இத்தாலி!

Thursday, January 26th, 2023

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உலங்குவானூர்திகளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலி அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (25) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோது இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது மற்றும் இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு இத்தாலி வழங்கக்கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது

000

Related posts:


யாழ். போதனா மருத்துவமனை சி.ரி.ஸ்கானர் பழுது! : கொடையாளிகள் அன்பளிப்புச் செய்யுங்கள் - மருத்துவமனைப் ...
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை அலரி மாளிகயைில் விஷேட சந...
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள நடவடிக்க...