மணாவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்!

Thursday, June 22nd, 2017

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மிடானவ் தீவில் உள்ள பாடசாலைக்குள் நுழைந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் மாணவ, மாணவிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. தனி நாடுக்கோரி கொடூர செயல்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் அமைப்பினர் கடந்த 23ஆம் திகதி முதல் தெற்கு பிலிப்பைன்ஸிலும் ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர்.ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்குமான சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிடானவ் தீவில் உள்ள பாடசாலைக்குள் தீவிரவாதிகளின் ஒரு அமைப்பான பி.ஐ.எஃப்.எஃப் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர்.100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் மாணவ, மாணவிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Related posts: