போர்த்துக்கல் காட்டுத்தீ: உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

Sunday, June 18th, 2017

போர்த்துக்கலில் ஏற்பட்டுள்ள பாரியளவிலான காட்டுத்தீ காரணமாக குறைந்தபட்சம் 57 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீதியில் கார்கள் மற்றும் வாகனங்களில் சென்றுகொண்டிருந்த பெருமளவானோர் தப்பியோட முயற்சித்த போதே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 59 பேர் காயமடைந்துள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.வெகுவாக பரவும் காட்டுத்தீயினை கட்டுப்படுத்துவதற்காக 600 தீயணைப்பு வீரர்கள் முயற்சிசெய்து வருகின்ற போதிலும் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஆறு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் இருவரை காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.தீயால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பகுதிகளை தீயணைப்பு வீரர்களால் நெருங்க முடியவில்லை என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி அவசியம் - சகல மாவட்ட பதிவ...
இல்லினாய்ஸ் பல்கலைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கண்காணிப்பு விஜயம் - பேராதனை பல்கலையுடனும் ஒப்பந்...