போயஸ் கார்டன் இல்லம் எனக்கும், தீபாவுக்கும் சொந்தமானது – தீபக்

Monday, June 12th, 2017

போயஸ் கார்டன் இல்லம் எனக்கும் தீபாவுக்கும் சொந்தமானது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்அத்தோடு, போயஸ் கார்டன் இல்லத்துக்கு விஜயம் செய்த தீபாவை யாரும் தடுத்து நிறுத்த வில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்த இன்று(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ‘என்னையும் தீபாவையும் யாரும் தடுக்க முடியாது. சகோதரி தீபாவை நான் தான் போயஸ் இல்லத்துக்கு அழைத்தேன். அதன் பேரிலேயே தீபா போயஸ் கார்டனுக்கு வருகை தந்தார். பின்னர் அவர் ஜெயலலிதாவின் ஒளிப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்என்று அவர் கூறியுள்ளார்.

போயஸ் இல்லத்திற்கு இன்று திடீர் விஜயம் செய்த தீபா போயஸ் கார்டன் இல்லத்தை உரிமை கோரியதாகவும், ஆனால் அவருக்கு உட்செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது தீபக் விளக்கமளித்துள்ளார்.

Related posts: