பொறுப்புக் கூறவேண்டும் அமெரிக்கா – ஈராக் !
Tuesday, June 19th, 2018சிரியாவின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அரச ஆதரவுப் படை வீரர்கள் 22 பேர் பலியானதைத் தொடர்ந்து, சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது.
சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சிரிய ௲ ஈராக்கிய எல்லையினருகே நேற்று முன்தினம் இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், சிரிய நாட்டினர் அல்லாத சிரிய அரசின் ஆதரவு பெற்ற வெளிநாட்டு படை வீரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார்.
சிரிய – ஈராக்கிய எல்லை அருகேயுள்ள அல்-ஹரி எனும் இடத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிரிய ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது
Related posts:
சிரியாவில் அரசு முற்றுகையிட்ட பகுதிக்கு உதவிகள் விநியோகம்!
இந்தியாவின் மிக நீளமான பாலம் திறப்பு!
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இன்று !
|
|