பொதுநலவாய போட்டிகளில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் பங்கேற்பர்!

Saturday, January 6th, 2018

அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

குறித்த வீரர்கள் பத்து வகையான விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர்கள் விசேட குழுவின் மூலம் தெரிவு செய்யப்படுவதாகவும்விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் மெய்வாண்மை தெரிவுப் போட்டிகள் அடுத்த மாத பிற்பகுதியில் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts: