பேருந்து குடைசாய்ந்து விபத்து – வடகொரியாவில் 36 சுற்றுலாப் பயணிகள் பலி!
Tuesday, April 24th, 2018வட கொரியாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 36 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் பேரூந்து குடைசாய்ந்ததை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பலியானவர்களில் 32 பேர் சீனர்கள் எனவும் ஏனைய நான்கு பேரும் வடகொரியாவைச் சேர்ந்தவர்கள். என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே வட கொரியாவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் 80 சதவீதமானவர்கள் சீனர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வருடாந்தம் ஒரு லட்சம் வெளிநாட்டவர்கள் வட கொரியாவிற்கு விஜயம் செய்வதாக புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.
Related posts:
சீனாவில் வாடகை வீட்டில் 400 முதலைக் குட்டிகள்!
ஒபாமா வைத்த புதிய செக்!
கழிவுக் கொள்கலன்கள் தொடர்பில் பிரித்தானியாவில் விசாரணை!
|
|