புயலில் சிக்கிய இத்தாலி!

Wednesday, October 31st, 2018

இத்தாலியில் கடுமையான புயல் தாக்கம் காரணமாக பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெனிஸ் நகரம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

மழை காரணமாக ஜெனோவா, ரோம், வெனீடோ, வெனிஸ், மெஸ்சினாவில் உள்ள சிலியான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: