புகையிரதம் தடம் புரண்டு விபத்து  – துருக்கியில் 10 பேர் உயிரிழப்பு!

Monday, July 9th, 2018

துருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்டதில் அதில் பயணம் செய்த 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 73 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்கேரிய எல்லையிலுள்ள கபிகுலே நகரிலிருந்து இஸ்தான்புல்லுக்குப் பயணித்த புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

சுமார் 360 பயணிகளுடன் சென்ற குறித்த புகையிரத்தின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: