பிலிப்பைன்ஸில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு!
Monday, December 31st, 2018
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று(30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனிடையே, பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈக்வடோர் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 413 ஆக உயர்வு!
பாடசாலை சிறார்களுக்கு அரசின் புதிய பாதுகாப்பு நடவடிக்கை!
சிரியாவின் கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் !
|
|
|


