பிரித்தானிய சபாநாயகர் டிரம்புக்கு தடை!
Wednesday, February 8th, 2017
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரையாற்ற அந்நாட்டு பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஜோன் பர்கவ் தடை விதித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி யொருவருக்கு பிரித்தானியா இவ்வாறு தடையொன்றை விதித்துள்ளது இதுவே வரலாற்றில் முதற்தடவையென சுட்டிக்காட்டப்படுகின்றது.
பிரித்தானிய சபாநாயகர் டிரம்பை ஒரு இனவாதியென பெயரிட்டுள்ளார்.சீனா, குவைட் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் அரச தலைவர்களுக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரையாற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பிரித்தானிய பாராளுமன்றத்திலுள்ள மிக செல்வாக்கும், அரசியல் பலமுள்ள தலைவர்கள் சிலரில் சபாநாயகரும் ஒருவர் எனவும் கூறப்படுகின்றது.

Related posts:
ஆஸ்திரேலியவில் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம்!
இந்தோனேசியாவில் பல்லி வகையை பாதுகாப்பதற்கு தேசிய பூங்காவிற்குப் பூட்டு!
இஸ்ரேலின் அசுரபலமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுது – ஏவுகணைகள் போது இடங்களை தாக்கியுள்ளதாக ஊடகங்களி...
|
|
|


