பிரித்தானியக் கடலில் உயிரிழந்த 5 தமிழர்களின் மரணத்தில் சந்தேகம்!  

Tuesday, June 27th, 2017

கடந்த 201ஆம் ஆண்டு பிரித்தானிய கடலில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எனக் கூறப்படும் இலங்கையத் தமிழர்கள் ஐவர் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அவர்களின் மரணத்தில் சந்தெகம் வெளியிடப்பட்டுள்ளது.

பலியானவர்களின் உறவினர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஆஜராகிய சட்டத்தரணியும் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்றை விசாரணைகளின் போது பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டன் பகுதியில் வசித்த குறித்த ஐவரும் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் 24ஆம் திகதி பிரித்தானியாவின் சசெக்ஸ் பிராந்தியத்தின் கெம்பர் சேண்ட்ஸ் கடலில் விளையாட சென்றனர். அதன்போபோததே நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர் எனக் கூறப்பட்டது.

நிதர்ஷன் ரவி (22 வயது), இந்துஷன் ஶ்ரீஸ்கந்தராஜா (23வயது), கோபிநாத் (22வயது), கெனிகன் சத்தியநாதன் (19வயது), குருசாந்த் சிறிதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவார். உயிரிழந்த கோபிநாதன் மற்றும் அவரது சகோதரர் கெனிகன் ஆகியோர் நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் என விசாரணையின் போது நோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மரணத்தின் ஊடாக பல பாடங்களை கற்றுக் கொண்டுள்ளதாகவும் இது போன்ற அனர்த்தத்தை வேறு யாரும் சந்திக்க கூடாதெனவும் உயிரிழந்தவர்களின் குடும்ப சட்டத்தரணி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சகோதரர்கள் இருவரும் நன்கு நீச்சல் திறனை கொண்டவர்கள் எனவும், இலங்கையில் அவர்களது கிராமம் மூன்று மிக பெரிய ஆறுகளால் சூழப்பட்டதெனவும் உயிரிழந்த சகோதரர்களின் தந்தை ஆறுமுகம் சத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு 10 முதல் 14 வயதில் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் தனது பிள்ளைகள் இருவரும் கிரிக்கெட், கால்பந்து மற்றும் நீச்சல் விளையாட்டுகளில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஈடுபடுவார்கள் என அவர் கூறியுள்ளார். தாங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு கோடைகாலத்திலும் பிரித்தானியாவிலுள்ள கடற்கரைக்குச் செல்வோம் எனவும் சில சந்தர்ப்பங்களில் தாம் இல்லாமல் பிள்ளைகள் மாத்திரம் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Brighton பல்கலைக்கழகத்தில் கோபி வர்த்தக கற்கைகளை மேற்கொண்டார். அவர் கெம்பர் கடலை நேசித்தார். 2016ஆம் ஆண்டு உயிரிழப்பதற்கு முன்னர் 3 முறை அந்த கடலுக்கு அவர் சென்று வந்தார் என தந்தை கூறியுள்ளார். கெனிகன் என்பவர் உயர்தர மாணவராவார். அவர் மிகவும் ஆரோக்கியமானவராகும் கூட அத்துடன் எந்தவொரு நோயினாலும் பாதிக்கப்படவில்லை எனவும் கோபிக்கும் பெரிய அளவிலான எந்த நோய் தன்மையும் காணப்படவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஐவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: