பிரசல்ஸ் விமான கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தம் !

Thursday, April 14th, 2016

பிரசல்ஸ் சர்வதேச விமான நிலைய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வு பெறும் வயதெல்லை மாற்றம், சம்பள உயர்வு, பணிச் சுமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகின்றது.

பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத்தில் கடந்த மாதம் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 34 பேர் பலியாயினர். இதனையடுத்து விமான சேவை இரத்து செய்யப்பட்டு, நிலைமை சரியான பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரசெல்ஸ் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் 200 விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு, விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பல்வேறு சௌகரியத்திற்கும் உள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: