பாரவூர்திகள் மோதி கோர விபத்து – இந்தியாவில் 13 பேர் பலி!
Tuesday, May 21st, 2019மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரவூர்தி ஒன்று, சிறிய ரக பாரவூர்தி ஒன்றுடன் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன் 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்பு ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று, சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்று கொண்டிருந்த சிறிய ரக பாரவூர்தியுடன் மோதியுள்ளது.
Related posts:
விஜயகாந்தை வீட்டுக்கு அனுப்பியது தேர்தல் ஆணையம்!
பிரித்தானியா விலகுவது உறுதியானது- கையெழுத்திட்ட தெரேசா மே!
பேருந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி!
|
|