இலண்டனில் பொது மக்கள் மீது கார் மோதியதில் பலர் படுகாயம்!
Thursday, November 2nd, 2017
இலண்டனில் பொது மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலண்டன் நகரின் Covent Garden பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு நேரப்படி மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கறுப்பு நிற கார் ஒன்று நடைபாதையில் நடந்துச் சென்ற பொது மக்கள் மீது மோதியுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஈராக்கில் இரட்டைக் குண்டு தாக்குதல்; 22 பேர் பலி!
கடத்தலில் ஈடுபட்டால் மரணதண்டனை- இந்தியாவில் புதிய சட்டம்!
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ!
|
|