பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

Wednesday, March 9th, 2016
பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசேன் சிறிலங்காவுக்கு திடீர் வியஜம் ஒன்றை மேற்கொண்டு நேற்று பிற்பகல் வந்தடைந்துள்ளார்.
குறுகிய நேரப் பயணமாகவே இலங்கை வந்திருப்பதாகவும், அவரது பயணம் அதிகாரபூர்வமானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வந்த பாகிஸ்தான் அதிபர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமாலை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தோனேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியிலேயே பாகிஸ்தான் அதிபர் நேற்று பிற்பல் திடீரென சிறிலங்கா வந்தார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பும் வழியில் அவர் சிறிலங்காவுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
எனினும், இருநாடுகளின் தலைவர்களும் வழக்கமான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாக செய்திகள் கூறுகின்றன.

Related posts: