பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்தது ஐ.நா!

Saturday, May 27th, 2017

இந்து – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வைத்து இந்திய படையினரால் கண்காணிப்பாளர்கள் தாக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டை ஐக்கிய நாடுகள் சபை நிராகரித்துள்ளது

இந்த குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கஞ்சார் பிராந்தியத்தில் வைத்து, ஐக்கிய நாடுகளின் இராணுவ கண்காணிப்பு குழு பயணித்த வாகனம் தாக்கப்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சுமத்தி இருந்தது

எனினும் இதனை மறுத்துள்ள ஐக்கிய நாடுகளின் பேச்சாளர், கண்காணிப்புக் குழுவினர் பாகிஸ்தானின் மிம்பெர் மாவட்டத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களை கேட்டதாகவும், எனினும் அவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்

அத்துடன் இதுவரையில் பாகிஸ்தான் – இந்திய எல்லையில் எந்த ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளரும் காயமடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: