பல்கேரியாவில் சரக்கு கொள்கலன் லொறியில் 18 ஆப்கான் அகதிகள் சடலங்களாக மீட்பு!

Sunday, February 19th, 2023

துருக்கியிலிருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கொள்கலன் லொறி ஒன்று  ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்று கொண்டிருப்பது பொலிஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீற்றர் தொலைவில் லொகர்ஸ்கொ என்ற கிராமத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருந்த அந்த கொள்கலன் லொறியைத் திறந்து பார்த்தனர்.

அப்போது, கொள்கலன் லொறியில் 52 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதில், 18 பேர் சடலங்களாகக் கிடந்தனர். குழந்தைகள் உள்பட எஞ்சிய 34 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில், கொள்கலனில் இருந்தவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் என்றும், அகதிகள் அனைவரும் துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயற்சித்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக 4 பேரை பல்கேரிய பொலிசார் கைது செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: