பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் !
Monday, October 17th, 2016
பபுவா நியூகினியா தீவிற்கு அருகில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாகவும் இந்நிலநடுக்கமானது 6.9 ரிச்டர் அளவு கோலில் பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் குறித்த நிலநடுக்கம் தொடர்பில் சேத விபரங்கள் இது வரையில் வெளியாகவில்லை.மேலும், சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையினை வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்படவில்லை.
இதனிடையே கடந்த 1988ஆம் ஆண்டு, 7.0 என்ற ரிச்டர் அளவில் சுனாமி பேரலை ஏற்பட்டது. இதன் போது 2100 பேர் எய்டெப் நகர பகுதியில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பிரெட் கவனாக் தேர்வு!
பாகிஸ்தானுக்கான தக்காளி ஏற்றுமதியை நிறுத்தினர் மத்திய பிரதேச விவசாயிகள்!
அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் சுட்டுக் கொலை!
|
|