பதின்ம வயது தற்கொலை குண்டுதாரி ஈராக்கில் கைது!

Tuesday, August 23rd, 2016

ஈராக்கில் தற்கொலை அங்கியை அணிந்திருந்த பதின்ம வயது நபர் ஒருவர் அதை வெடிக்கச் செய்வதற்கு முன்பாக போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

கிர்குக்கின் வடக்கு பகுதியில் அந்த சிறுவனிடமிருந்து வெடிகுண்டை செயலிழக்கச் செய்து போலிஸார் அவனை கைது செய்த பரபரப்பு காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. முன்னதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பால் ஷியா முஸ்லிம் மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் தாக்குதல்தாரி கொல்லப்பட்டார்.

Related posts: