படகு கவிழ்ந்து விபத்து – 13 பேர் பலி!
Sunday, January 7th, 2018
சுமாத்ரா தீவின் முஷீ ஆற்றில் பயணிகள் படகொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து இடம்பெறும் போது படகில் 55 பேர் பயணித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் , உயிர் தப்பிய படகின் கேப்டன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவரை தேடி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தோனேசியாவில் கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற இரண்டாவது படகு விபத்து இதுவாகும்.கடந்த இரு தினங்குக்கு முன்னர் இடம்பெற்ற படகு விபத்தில் 9 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மத குருவை நாடு கடத்துவதற்கு நிபந்தனை!
ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவதற்கு 30 நாட்கள் தடை - ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்!
18 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – தடுமாறும் வல்லாதிக்க நாடுகள்!
|
|
|


