படகு ஒன்று விபத்து:13 பேர் பலி!

Thursday, July 27th, 2017

லிபியாவில் அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். லிபியா எல்லை அருகே நேற்று அகதிகள் பயணம் செய்த சிறிய படகு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து இத்தாலி நாட்டைச் சேர்ந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன்போது 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற போது அந்த படகில் சுமார் 167 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 2 ஆயிரத்து 370 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் 10 பேர் உயிரிழந்தனர்விபத்து இடம்பெற்ற போது அந்தப் படகில் 40 பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.

இந்தோனேசியா – மலேசியா இடையேயான நீர் வழிப்போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடற்பாறையில் மோதி ஒரு படகு விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பலியானமை நினைவுகூரத்தக்கது.

Related posts: