பங்களாதேஷ் ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து ; பலர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரை!
Tuesday, March 23rd, 2021
பங்களாதேஷின் தெற்கில் அமைந்துள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம் பாரிய தீ விபத்த ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக் கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன், பலர் உயிரிழந்துள்ளதாக நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காக்ஸ் பஜாரின், உக்கியாவில் அமைந்துள்ள பலுகாலி அகதிகள் முகாமில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இரண்டு குழந்தகைளும், ஒரு பெண் உட்பட நான்கு ரோஹிங்கியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்து பல மணிநேரம் நீடித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் பலத்த போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஏனினும் உயிரிழப்புகள் தொடர்பாக அதிகாரிகள் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் இருந்து சுமார் 10 இலட்சம் முஸ்லிம் சிறுபான்மையினர் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள முகாம்களில் நெருக்கடியான மற்றும் மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts: