பங்களாதேஷை உலுக்கும் மோரா சூறாவளி!

Tuesday, May 30th, 2017

மோரா சூறாவளி தற்போது பங்களாதேஸை தாக்கியுள்ளது.இதனால் அந்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும் அங்கு 117 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே அங்கிருந்து 1 மில்லியன் மக்கள் அளவில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்த சூறாவளி இந்தியா மற்றும் மியன்மாரின் ஒரு சில பகுதிகளையும் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

Related posts: