நேரடி போருக்கு பாகிஸ்தான் இராணுவம் தயாராக உள்ளது – பாகிஸ்தான் இராணுவ தளபதி !
Monday, November 21st, 2016இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், அத்துமீறிய தாக்குதல்களையும் நடத்தி மறைமுகப் போரை திணித்து வருகிறது.
அந்த வகையில், காஷ்மீர் எல்லைப்பகுதியில் முகாமிட்டு, இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்த சதிசெய்து கொண்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் 28–ந் திகதி நள்ளிரவில் துல்லியமான தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், சுமார் 40 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
பாகிஸ்தான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி தந்து வருகின்றனர். சமீபத்தில் நடத்திய பதிலடி தாக்குதலில், ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது இறுதி சடங்கில், பாகிஸ்தான் இராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் பங்கேற்றார்.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர், உலகின் எந்த ஒரு ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவம் சளைத்ததல்ல. எந்த நாடாக இருந்தாலும் எதிர்கொள்ளும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது. தாய் நாட்டை காக்க எங்கள் வீரர்கள் தாக்குதலை துணிந்து சந்தித்து வருகின்றனர்.
மேலும், எல்லையருகே பணியாற்றும் வீரர்களின் வீரம் பாராட்டுக்குரியது. நேரடி போருக்கும் பாகிஸ்தான் இராணுவம் எந்த நேரமும் தயாராக உள்ளோம். அதிலும் வெற்றி பெறுவோம் என சவால்விட்டுள்ளார் பாகிஸ்தான்ரா இணுவ தளபதி ரஹீல் ஷெரீப்.
Related posts:
|
|