நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஓலி பதிவியேற்பு!
Monday, July 15th, 2024
நேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சர்மா ஓலி (k.p.sharma oliver) இன்று (15) புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
அதன்படி, அந்நாட்டின் பிரதமராக சர்மா ஒலி நான்காவது முறையாகவும் பதவியேற்றுக்கொண்டுள்ளார்..
நேபாள நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் தாஹால் (Pushpa Kamal Dahal) பிரசண்டா தோல்வியை சந்தித்தார்.
இதையடுத்து, அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்த கே.பி.சா்மா ஓலி, தனது தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார்.
அதன்படி, ஜனாதிபதி ராம் சந்திர பவுடலால் (Ram Chandra Poudel), புதிய பிரதமராக சா்மா ஓலியை நேற்று (14) நியமிக்கப்பட்ட நிலையில், இன்று காலை உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்ள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கழிவுக் கொள்கலன்கள் தொடர்பில் பிரித்தானியாவில் விசாரணை!
கொவிட் 19 தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 37,780ஆக அதிகரிப்பு!
நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஆரம்பம்முதல் இணைந்து பயணித்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்ற...
|
|
|


