நேட்டோ அமைப்பு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை!

Friday, July 13th, 2018

நேட்டோ அமைப்பை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடுகள், அந்த அமைப்புக்கு வழங்குகின்ற நிதிப் பங்களிப்பை இரட்டிப்பாக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பை பிரதிநிதித்துப்படுத்தும் நாடுகள் நோட்டோ அமைப்பிற்கு, தமது தேசிய உற்பத்தியில் 4 சதவீத நிதிப்பங்களிப்பை வழங்குகின்றன. இதனால் நேட்டோ அமைப்பைக் கொண்டு நடத்த அமெரிக்காவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டே, நேட்டோ அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகள் தமது நிதிப்பங்களிப்பை 8 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.

Related posts: