நூலிழையில் தப்பிய இரண்டு பயணிகள் விமானம்!

Tuesday, September 19th, 2017

பிரித்தானிய நாட்டில் தரையிறங்க முயன்ற இரண்டு பயணிகள் விமானம் ஒன்றன் மீது ஒன்றாக மோதுவது போல் பறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் உள்ள Heathrow விமான நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் Virgin Atlantic A340 மற்றும் British Airways 787 Dreamliner என்ற இரண்டு பயணிகள் விமானம் ஒரே நேரத்தில் தரையிறங்க வந்துள்ளது.

இரண்டு விமானங்களுக்கும் உடனடியாக அனுமதி கிடைக்காததால் அவை இரண்டும் வானத்தில் வட்டமாக பறந்து சென்றுள்ளன.அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு விமானங்களும் ஒன்றன் மீது ஒன்றாக பறப்பது போல் பறந்துள்ளது.இக்காட்சியை விமான நிலையத்திற்கு அருகில் வசித்து வரும் Chris Hine(70) என்பவர் தத்ரூபமாக படம் பிடித்துள்ளார்.

இரண்டு விமானங்களிலும் சுமார் 500 பயணிகள் வரை பயணம் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக புகைப்படம் எடுத்து நபர் உணர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து விமான நிலைய அதிகாரிகள் பேசியபோது, ‘தற்போதைய நவீன காலத்தில் தொழில்நுட்பம் அதிகளவில் வளர்ந்துள்ளது. விமானங்களில் எச்சரிக்கை விடுக்கும் அதிநவீன கருவிகள் உள்ளன.

வானத்தில் ஒரு குறிப்பிட்ட இடைவெளி தூரத்தில் மற்றொரு விமானம் வந்தால் அதனை வினாடிப் பொழுதில் எச்சரிக்கை விடுக்கும் கருவிகள் உள்ளன.ஒவ்வொரு விமானமும் குறைந்தபட்சம் 1000 அடிகளுக்கு அருகில் பறப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த இரண்டு விமானங்களின் இடைவெளி தூரமும் 1000 அடிகள் இருக்கும்.தரையில் இருந்து புகைப்படம் பிடித்ததால் இரண்டும் ஒன்றின் மீது ஒன்றாக பறப்பது போல் காட்சியளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.

Related posts: