நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரம் – மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!
Friday, February 10th, 2023
தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
துருக்கியில் 17,674 பேரும் சிரியாவில் 3,377 பேரும் இறந்துள்ளனர். அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.
இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிருடன் இருந்த பலர் தண்ணீர் அல்லது கடும் குளிரில் வெப்பம் இன்றி உயிரிழப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், உயிர் பிழைத்த பலர் தங்குமிடம் தண்ணீர் எரிபொருள் அல்லது மின்சாரம் இல்லாமல் தங்கள் உயிரை இழக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியப் பிரதமர் இரங்கல்
அனைவருக்கும் சமமான பிரதிபலன்களை வழங்கும் சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது - ஜனாதிபதி தெரிவிப்ப...
ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு - எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு!
|
|
|


