நிறுத்தி வைக்கப்பட்ட விமானத்துடன் பயணிகள் விமானம் மோதல்!

Thursday, May 17th, 2018

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு 222 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் பயணிகள் விமானம்ஒன்று பயணத்தை ஆரம்பித்தது.

குறித்த விமானம் ஓடுதளத்தில் பயணத்தை ஆரம்பிக்க தயாராக சென்று கொண்டிருந்தபோது, ஓடுதளத்தை அண்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கியை சேர்ந்த மற்றொருவிமானத்துடன் மோதியுள்ளது.

இதன்போது கொரிய விமானத்தின் இறக்கைகள், துருக்கி விமானத்தின் பின் பகுதி இறக்கையுடன் மோதியது. இதில் துருக்கி விமானத்தின் பின்பக்க இறக்கைசேதமடைந்ததோடு, தீ பிடித்து எரிந்தது.

இதையடுத்து உடனடியாக கொரிய விமானம் நிறுத்தப்பட்டு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.

கொரிய விமானமும் சேதமடைந்ததால் அதிலிருந்த பயணிகள் உடனடியாக இறக்கப்பட்டு, ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர்.

Related posts: