நான் பதவி ஏற்கும் வரை விருந்து நிகழ்ச்சிகள்,இறுதிச்சடங்கு நடத்த கூடாது வட கொரிய அதிபர் உத்தரவு
Wednesday, May 4th, 2016வடகொரியா அதிபர் கிம் ஜாங்கின் பதவிப்பிரமாணம் நடைபெறவிருக்கிறது. இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிம் ஜாங் 33 வயதை எட்டியுள்ளதால் இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சி மே 6 ஆம் தேதிக்கு பின்னர் நடைபெறவிருக்கிறது.
ஆனால் சரியான தேதி வெளியிடப்படவில்லை, இந்நிலையில் கிம் ஜாங், தனதுநாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், பதவிப் பிரமாணம் பாதுகாப்புகருதி, நான் பதவியேற்கும் வரைநாட்டில் திருமணங்கள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது.
அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் இறந்துவிட்டால் கூட இறுதிச்சடங்கினை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
அதிபரின் இந்த உத்தரவினை கேட்டு அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Related posts:
இத்தாலிக் கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் பலி!
காஷ்மீர் மாநிலத்துக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சி- இந்தியா குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் : புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து!
|
|