எர்துவான் – விளாடிமிர் புடின் சந்திப்பு!

Tuesday, August 9th, 2016

துருக்கி அதிபர் ரிசீப் தாயிப் எர்துவான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் ஆகியோர் ரய்ஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கடந்த மாதம் தனக்கு எதிராக நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்த பின்னர், எர்துவான் செல்லும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இது அமைகிறது.

ரய்ஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ஒரு நண்பர் என்று குறிப்பிட்ட எர்துவான், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு புதிய பக்கத்தை திருப்பிட தான் விரும்புவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, சிரியா நாட்டு எல்லையில், ரய்ஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து, ரய்ஷ்யா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் நெருக்கடியில் ஆழ்ந்தது

துருக்கியில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு அரசின் பதிலடி நடவடிக்கைகள் அளவுக்கதிகமாக இருந்ததாக துருக்கியின் மேற்கத்திய கூட்டாளி நாடுகளின் விமர்சனங்கள் அதிகரித்துள்ள வேளையில், எர்துவானின் ரஷ்ய பயணம் அமைந்துள்ளது.

Related posts: