நடராஜன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

சசிகலாவின் கணவரான நடராஜன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி சசிகலா பரோல் கோரியுள்ளார்.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
இதற்கிடையில் சசிகலாவின் கணவரான நடராஜன் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது உடல்நலம் குன்றி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கல்லீரல் மற்றும் சிறுநீர்கம் செயல்படாமல் இருப்பதை கண்டறிந்துள்ளனர்
இதையடுத்து மாற்று உறுப்புகள் பொருத்தப்பட்டதால் அவர் உடல்நலம் தேறி வந்தார். இதன் காரணமாக அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் வந்த அவருக்கு கடந்த சில தினங்களாக மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீடீர் நெஞ்சுவலி காரணமாக நடராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்
அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது இதையடுத்து பெங்களூர் சிறையில் உள்ள அவர் மனைவி சசிகலா கணவரை காண பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார். அவரது பரோல் மனு ஏற்கப்படும் என்று தெரிகிறது.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்னரும் நடராஜனின் உடல்நலக் குறைவு காரணத்தை வைத்து சசிகலா பரோலில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|