தொடர் மழை: – இந்தோனேசியாவில் 23 பேர் பலி!
Friday, January 3rd, 2020இந்தோனேசியாவில் இடைவிடாமல் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தா பிராந்தியத்தில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 10 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மின்விபத்துக்களை தவிர்க்கும் வகையில் ஜகார்த்தாவின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சில ரெயில் பாதைகளும், விமான நிலையங்களும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்!
ஜி-7 மாநாடு இன்று ஆரம்பம்!
2019 இறுதியில் ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி!
|
|