தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத் தண்டனை!

Sunday, July 22nd, 2018

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குன்-ஹே (Park Geun-hye) க்கு மேலும் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் செய்த குற்றத்துக்காக பார்க் குன்-ஹேக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறதென தென்கொரிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஊழல் குற்றச் சாட்டில் பார்க்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தநிலையில் மேலும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
66 வயதான பார்க் குன்-ஹே தென்கொரியாவில் ஜனாதிபதியான இருந்த போது பெரும் ஊழல் செய்து பல கோடி ரூபாய் சொத்து சேர்த்த குற்றச்சாட்டு தொடர்பில் அவரது தோழி சோய் சூன் சூலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது

Related posts: