தென்னாபிரிக்காவிலிருந்து ரஸ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை – தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவிப்பு!

Monday, September 4th, 2023

தென்னாபிரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்;.

தனது நாடு ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ‘எந்த ஆதாரமும்’ சுயாதீன விசாரணையில் கண்டறியப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், 50 பேரிடம் நடத்திய நேர்காணல் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: