துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு : அருட்தந்தை ஃபேதுல்லா ஹியூலென் மீது குற்றச்சாட்டு!
Sunday, July 17th, 2016
துருக்கியை விட்டு வெளியேறி பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் மத போதகர் ஃபேதுல்லா ஹியூலென், துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று மறுத்துள்ளார்.
75 வயதான அவர் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கடுமையாகக் கண்டித்துள்ளார். அரசு நிறுவனங்களுக்கு இணையான அமைப்பை உருவாக்க முயற்சித்ததாக துருக்கி அரசு ஹியூலென் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
அவர் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தன்னை இழிவுபடுத்துவதாக விவரித்தார். போதகருக்கு எதிரான ஆதாரம் இருந்தால் அதை பகிரவேண்டும் என்று துருக்கியை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ளதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தானில் இராணுவம்!
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி!
புதிய இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் - ஐரோப்பிய நாடுகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள துரிதமான ...
|
|
|


