திட்டங்களை உரிய நேரத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் மோடியின் வளர்ச்சி – இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!
 Friday, March 15th, 2024
        
                    Friday, March 15th, 2024
            
திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றி அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டன. ஆனால், திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. பல திட்டங்கள் தாமதம் செய்யப்பட்டன. இது உலக அரங்கில் இந்தியாவின் மீதான மதிப்பைக் குறைத்தது என அவர் தெரிவித்தார்.
ஆனால், மோடி பிரதமராக பதவி ஏற்ற பிறகு நிலைமை மாறத்தொடங்கியது. பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியதோடு அவற்றை உரிய நேரத்தில் முடிக்கவும் செய்தார்.
அவரது இந்த முயற்சியால், வடகிழக்கு மாநிலங்கள் பெரும் பலன் அடைந்துள்ளதுடன் வளர்ச்சித் திட்டங்களில் வடகிழக்கு மாநிலங்களுக்கு மத்தியஅரசு முக்கியத்துவம் வழங்குகிறது எனவும் குறிப்பிட்டார்.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        