தாய்லாந்தில் தொடர் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி!
Friday, August 12th, 2016
தாய்லாந்தின் தெற்கு பகுதியில் நேற்று(11) நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.
24 மணி நேரத்திற்குள்ளாக ஹுவா ஹின் என்ற விடுதி இராண்டாவது முறையாக மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் புக்கட் தீவிலும், சூரத் தானி மற்றும் ட்ராங் போன்ற நகரங்களிலும் குண்டு வெடிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன.
இந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்து ராணுவ ஆட்சியின் தலைவரான பிரயூத் சன்-ஒ-சா இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் கலவரம் மற்றும் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி இது என அவர் கூறியுள்ளார்.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
Related posts:
வியட்நாம் ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்!
சவுதிக்கு விரையும் கட்டார் மக்கள்!
ரூ.70 கோடி மோசடி செய்த இந்தியர்: 13 ஆண்டு சிறை தண்டனை!
|
|