தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்ட சிரிய பிரஜை கைது!
Wednesday, May 31st, 2017
பேர்லினில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சிரியாவை சேர்ந்த பதின்ம வயது இளைஞனை அந்நாட்டு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தலைநகரில் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த சிரியா இனைஞனை கைதுசெய்துள்ளோம் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இளைஞன் தனது தாய்க்கு அனுப்பிய தகவலை இடைமறித்தவேளையே இந்த திட்டம் குறித்து தெரியவந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.தனது தாய்க்கான செய்தியில் தான் தற்போதே ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக அந்த இளைஞன் தெரிவித்திருந்தான் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள நபர் 2015 இல் ஜேர்மனிற்கு புகலிடம்கோரி தனியாக வந்திருந்தார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
Related posts:
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகருக்குள் நுழைந்த ரஷிய படைகள்!
கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு சட்ட அனுமதி!
பெலரஸூக்கு குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு!
|
|
|


