தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு – பாகிஸ்தானில் 9 பேர் பலி!
Monday, July 22nd, 2019பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள சோதனை சாவடி ஒன்றில் பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதுதவிர, உந்துருளியில் பயணித்த 4 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதலில் 9 பேர் பலியானதுடன் காயமடைந்த 40க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 6 பேர் காவல்துறையினர் என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் இயக்கம் உரிமை கோரியுள்ளது.
Related posts:
வட கொரிய ஜனாதிபதி கிம் மீது அமெரிக்கா தடை விதிப்பு!
8 மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து - 7 பேர் உயிரிழப்பு!
கொரோனா தொற்று: இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது!
|
|