தமிழக சட்டசபை தேர்தல்: தோராயமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு !

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 71.79 சதவீத வாக்குகள் பதிவுவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தேர்தல் நடத்து அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதனால், முழுமையான வாகுப்பதிவு சதவீதம் வரவில்லை. தொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணி அளவில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை தெரியவரும்” என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
Related posts:
உயிருக்கு ஆபத்து என்றாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் – போப் ஆண்டவர்!
திறமைசாலிகளை இழக்கப் போகும் ட்ரம்ப்!
கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட 43 தொழிலாளிகள்: நைஜீரியாவில் கொடூரம்!
|
|